ஆந்திர பிரதேசத்தில் 10 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

March 4, 2023

ஆந்திர பிரதேச மாநிலத்தில், புதிதாக, 10 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, ஆந்திர மாநில அரசுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை வெளியிட்டார். 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டார். நிகழ்வில் பேசிய அவர், மேலும் பல செய்திகளை கூறினார். குறிப்பாக, எரிவாயு பைப் லைன் திட்டத்திற்காக 1.50 லட்சம் […]

ஆந்திர பிரதேச மாநிலத்தில், புதிதாக, 10 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, ஆந்திர மாநில அரசுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டார். நிகழ்வில் பேசிய அவர், மேலும் பல செய்திகளை கூறினார். குறிப்பாக, எரிவாயு பைப் லைன் திட்டத்திற்காக 1.50 லட்சம் கோடியை முதலீடு செய்ததாக கூறினார். மேலும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஜியோ 5ஜி சேவை ஆந்திர பிரதேச மாநிலத்தின் 98% மக்களை சென்றடையும் என்று கூறினார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறு வணிகர்களுடன் இணைந்து, டிஜிட்டல் வர்த்தக முறையை செயல்படுத்தும் திட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், இந்த திட்டத்தின் மூலம், பல வியாபாரிகள் டிஜிட்டல் வணிகத்திற்கு மாறி உள்ளதாக பதிவு செய்தார். மேலும், வேளாண் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களில் ரிலையன்ஸ் குழுமம் ஈடுபட உள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கும், கைவினை கலைஞர்களுக்கும் வருவாய் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu