விருதுநகர் மாவட்டம் ராமதேவன் பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ஒரு லட்சணமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.