தமிழக அரசு வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டில் இந்தியாவில் கடுமையான வெப்ப அலை அதிகமாக வீசியது. இதன் காரணமாக, கோடைக்காலத்தில் வரலாறு காணாத வெப்பநிலைகள் பதிவானது, இதனால் பலர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, தமிழக அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. இனிமேல், வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல்களை வழங்கவும், குடிநீர் வழங்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிதி பயன்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.