டெல்லியில் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் கனமழை தொடரும் எனவும், அதற்காக ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நிவாரணம் அளிக்கப்பட உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது