குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள ஆறு அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது கேரளாவை சேர்ந்த ஆப்ரஹாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஆகும். இதில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தீவிரமாக நடைபெற்ற மீட்பு பணிகளில் 90க்கும் அதிகமானவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது