டெல்லி மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் உள்ள பூமிஹீன் முகாமில் கடந்த வாரம் அரசு நிலம் ஆக்கிரமிப்பின் பெயரில் சுமார் 300 வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் தமிழர்கள் வசித்த மதராசி கேம்ப் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் 370க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நிவாரணமாக ரூ.50 லட்சம் ஒதுக்கி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8000 நிதியுதவி மற்றும் ரூ.4000 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவிட்டார். தற்போது 360 குடும்பங்களுக்கு நேரடி வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு பொருட்கள் அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்.