பப்புவா நியூ கினியா நாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது இந்நாட்டிற்க்கு இந்தியா நிவாரண உதவிகளை வழங்கி விமானம் மூலம் அனுப்பி உள்ளது
கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது. மேலும் அங்கு ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக அந்நாட்டு அரசிற்கும் மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா பப்புவா கினியா நாட்டிற்கு உறுதியாக நின்று வருகிறது. மேலும் அந்த நாட்டிற்கு நிவாரண உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. அதில் ஒரு பகுதியாக 11 டன் பேரிடர் நிவாரண பொருட்கள் மற்றும் 6 டன் மருத்துவ உதவிகளுடன் இந்தியா சிறப்பு விமானத்தை பப்புவா நியூ கினியா நாட்டிற்கு அனுப்பியுள்ளது.