மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலர் காயம் அடைந்தனர். இதுவரை ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும், காயமுற்றவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்














