வங்கதேசத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் ரீமெல் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரீமெல் புயலாக வலுவடைந்தது. இது மேலும் வலுவடைந்து வங்கதேசத்தில் உள்ள கேப்புப்பாராவுக்கும் மேற்கு வங்கத்தில் சாகத் தீவுக்கும் இடையே ஞாயிறன்று இரவு கரையை கடந்தது. அப்போது 135 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக்காற்று வீசியது. இதனால் வங்கதேசத்தில் உள்ள சட்கீரா, பட்வாகாலி, போலா, சட்டோகிராம், பரிசால் போன்ற பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மரங்கள் வேருடன் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 30 லட்சம் பேர் மின் வினியோகம் இன்றி சிரமப்பட்டனர். பள்ளிகளுக்கு காலவரம்பின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு உள்ள கடலோர பகுதிகளில் இருந்து சுமார் 8 லட்சம் லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்காக சுமார் 9000 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூறாவளி காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வங்கதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் கடந்த இரு நாட்களில் 394 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.