சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடக்கம்

September 14, 2022

சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் புதிய விமான நிலைய கட்டுமான பணி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 12 பழைய விமானங்கள் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இந்த விமானங்களில் பறவைகள் கூடுகட்டி […]

சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் புதிய விமான நிலைய கட்டுமான பணி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 12 பழைய விமானங்கள் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை.

இந்த விமானங்களில் பறவைகள் கூடுகட்டி மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டும் இதுபோன்று 5 விமானங்களை அகற்றினர். எனவே,செயற்பாட்டில் இல்லாத விமானத்தின் உதிரி பாகங்களை தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள பாகங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. மேலும், இத்தனை ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனத்திடம் இதற்கான தொகையும் வசூலிக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu