ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்க்கான நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1948-ஆம் ஆண்டில், தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார். சில காலம் பிறகு, நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. 1966-ல், பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்தடை விதித்தார். அண்மையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 58 ஆண்டு கால தடையை நீக்கியது. தற்போது, ராஜஸ்தான் மாநில பாஜக அரசு 1972ல் விதிக்கப்பட்ட 52 ஆண்டு பழைய தடையை நீக்கியுள்ளது. ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே இப்படியான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.