யானைகள் மறுவாழ்வு மைய நிலை குறித்து அறிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு.

November 1, 2022

யானைகள் மறுவாழ்வு மைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் எஸ்.முரளிதரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நோய் வாய்ப்பட்ட, ஓய்வு பெற்ற யானைகளை பராமரிக்க, 2019ல், திருச்சி - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டது. இந்த மையத்தில், தற்போது உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டது எனக் கூறி, உரிமையாளர்களிடம் இருந்து […]

யானைகள் மறுவாழ்வு மைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் எஸ்.முரளிதரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நோய் வாய்ப்பட்ட, ஓய்வு பெற்ற யானைகளை பராமரிக்க, 2019ல், திருச்சி - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டது. இந்த மையத்தில், தற்போது உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டது எனக் கூறி, உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்த யானைகளை குவித்து வருகின்றனர்.

அந்த மையத்தில், தற்போது முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால், அங்கிருக்கும் ஏழு யானைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில், நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மையத்தில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அரசின் கடமை. மனிதர்களை போல விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளன. தற்போது, வேலுாரில் உள்ள வனத்துறை அதிகாரி சுஜாதா, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை நேரில் ஆய்வு செய்து, அதன் நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu