வண்டலூர் அருகே புதிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆம்னி பஸ்களை மாற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் என உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் கிளாம்பக்கத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து ஆம்னி வl பேருந்துகளும் பொங்கல் பண்டிகையை அடுத்த 24 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தற்போது ஏதுவான சூழல் இல்லாத நிலையில் கால அவகாசம் வேண்டும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.