அனைத்து பயணியர் ரயில்களையும், ஏற்கனவே இருந்த சாதாரண கட்டணத்தில் மீண்டும் இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலர் ஏ.கிரி கூறுகையில், கொரோனா பாதிப்பு குறைந்த பின், நாடு முழுதும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ரயில்கள் தற்போது விரைவு அல்லது சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.
அதே வழித்தடம், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்கின்றன. ஏற்கனவே 10 ரூபாய் தான் இருந்தது. தற்போது 30 ருபாயாக உள்ளது. எனவே பயணியர் ரயில்களில் ஏற்கனவே இருந்த சாதாரண கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.