வயநாட்டில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 160 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளா, வாயநாட்டில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய அளவிலான சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இன்று 2 ஆவது நாளாக. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 160 பேர் உயிரிழந்ததாகவும், 39 உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக பேரிடர் மீட்பு குழு,மருத்துவக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கேரளா அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி அளித்து வருகின்றன.