காயங்களை 30% வேகமாக குணப்படுத்தும் இ பேண்டேஜ் - புதிய கண்டுபிடிப்பு

February 24, 2023

உடலில் ஏற்படும் காயங்களை 30% வேகமாக குணப்படுத்தும் இ பேண்டேஜ் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டறிந்துள்ளனர். இதன்படி, நேரடியாக காயங்கள் உள்ள இடத்தில் எலக்ட்ரோதெரபி கொடுக்கப்படுகிறது. 'சயின்ஸ் அட்வான்ஸஸ்' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், முதல் முதலாக எலிகளுக்கு எலக்ட்ரோதெரபி முறை பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, எலிகளுக்கு நீரிழிவு நோய் மூலமாக ஏற்படும் காயங்கள் வேகமாக ஆறுவது கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த சிகிச்சை மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பொதுவாக, […]

உடலில் ஏற்படும் காயங்களை 30% வேகமாக குணப்படுத்தும் இ பேண்டேஜ் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டறிந்துள்ளனர். இதன்படி, நேரடியாக காயங்கள் உள்ள இடத்தில் எலக்ட்ரோதெரபி கொடுக்கப்படுகிறது.

'சயின்ஸ் அட்வான்ஸஸ்' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், முதல் முதலாக எலிகளுக்கு எலக்ட்ரோதெரபி முறை பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, எலிகளுக்கு நீரிழிவு நோய் மூலமாக ஏற்படும் காயங்கள் வேகமாக ஆறுவது கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த சிகிச்சை மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பொதுவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டால், அது விரைவில் ஆறுவதில்லை. மாறாக, கை / கால்களை நீக்கும் அளவிற்கோ, மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கோ வீரியமடைகிறது.எனவே, அதற்கான தீர்வாக இ பேண்டேஜ் அமையும் என்று கருதப்படுகிறது.

இந்த பேண்டேஜ்களில் எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது காயம் ஆறுவதை கண்காணித்து, அதன்படி செயல்படுகிறது. காயம் முழுமையாக ஆறியவுடன், இது உடம்பிற்குள் கரைந்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த வித பாதிப்பும் நேராது என்று சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu