அக்னிபாத் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் முப்படைகளுக்கும் 17 1/2 வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நான்கு வருடம் பணிபுரிந்த பின் வெளியேற்றப்படுவார்கள். அதன் பின் 15 வருடத்திற்கு 25% தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதனை பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது போன்று உள்ளதாக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரிகள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் இதனை ஆதரித்து பேசி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படையில் கான்ஸ்டபிள் வேலைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு துறையில் உடன்திறன் தெருவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.