பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் அதிகமாகி வருகின்றன. எனவே, அதற்கான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கி உள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில், தனிநபர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதற்கான ரிஸ்க் வெயிட்டேஜை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. முன்னதாக, 100% ஆக இருந்த தனிநபர் கடன் ரிஸ்க் வெயிட்டேஜ், தற்போது 125% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களை வழங்கும் போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் இயங்கும் என கருதப்படுகிறது. அத்துடன், நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் திறன் கட்டுப்படுத்தப்படும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி, வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன், தங்க நகை கடன் ஆகியவை மீதான ரிஸ்க் வெயிட்டேஜ் மாற்றமின்றி தொடரும் என கூறியுள்ளது. மேலும், கடன் அட்டை மீதான ரிஸ்க் வெயிட்டேஜ் 25% உயர்த்தப்பட்டு, 150% ஆக நிர்ணயிக்கப்படுவதாக கூறியுள்ளது.