தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: தமிழக அரசு

October 10, 2022

தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என்று பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிமன்ற […]

தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என்று பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி நடப்பாண்டு தீபாவளி பண்டிகையின் போதும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறைந்த ஒலியுடன் குறைந்த காற்று மாசு ஏற்படுத்தக் கூடிய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu