நாகையில் இருந்து இலங்கைக்கு 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை 16ஆம் தேதி முதல் மீண்டும் துவங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (12-ம் தேதி) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற கப்பல் சோதனை ஓட்டத்தை கடந்த 10-ம் தேதி மேற்கொண்டது. சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகளும் உள்ள கப்பலில், ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு www.sailindsri.com என்ற இணையதளத்தில் செய்யலாம்.