தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஆசிரியர்கள், மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக மாற்றி இதற்கான அரசாணையை மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோட், அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அதிக சம்பளம் அதிக சம்பளம் வழங்கி வருகிறது. மேலும் இவர்களுக்கு மாத ஊதியம் 13,650 ரூபாயும், மினி அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளர்களுக்கு 7800 ரூபாயும் வழங்கப்படுகிறது. மாநில அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக 70 ஆயிரம் அங்கன்வாடிகள் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளார்.