முதலீட்டு நிறுவனமான மோன்டா விஸ்டா கேபிட்டலின் நிறுவனர் வெங்கடேஷ் சுக்லா, கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தர இங்கிலாந்துக்கு கோரிய மனுவை சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கியுள்ளார். அதில் 1 மில்லியன் கையெழுத்துகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
சுக்லா அப்பதிவில் ௯றியதாவது, கோஹினூர் வைரம் இந்தியாவில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய வைரங்களில் ஒன்றாகும். இது பல்வேறு மன்னர்களிடம் கை மாறியது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் தலீப் சிங்கை ஆங்கிலேயர் பிடியில் இருந்து மீட்பதற்காக கொஹினூரானது ஆங்கிலேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இ௫ப்பினும் அவர்கள் தலீப் சிங்கை இங்கிலாந்திற்கு இடம் மாற்றினர். இப்படி தகாதமுறையில் பெறப்பட்ட கோகினூரை ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு இந்தியாவிடம் திருப்பித் தருவதே இங்கிலாந்திற்கு கெளரவம் என்று கூறினார். அத்துடன் இந்த மனுவில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் கையெழுத்தையாவது பெறவேண்டும் என்றும் , ஜனவரி 26, 2023 அன்று, உலக இந்தியர்கள் அனைவரும் இங்கிலாந்தின் உயர் தூதரகத்திற்குச் சென்று இந்த மனுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டி௫ந்தார்.