அமெரிக்காவை சேர்ந்த 'வாட்டர்பில்டர்குரு.காம்' நடத்திய சமீபத்திய ஆய்வில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான வாட்டர் பாட்டில்களில், கழிவறை இருக்கையை விட 40000 மடங்கு பாக்டீரியா உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் இந்த ஆய்வறிக்கை குறித்து இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வெவ்வேறு வகையான வாட்டர் பாட்டில்களில், கிட்டத்தட்ட 3 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது, கிராம் நெகட்டிவ் ராட்ஸ் மற்றும் பேசிலஸ் வகை பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கண்டறியப்பட்ட பாக்டீரியாவின் அளவு, மற்ற வீட்டு உபயோக பொருட்களுடன் ஒப்பிட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சமையலறை சிங்கை விட 2 மடங்கும், கணினி மௌசை விட 4 மடங்கும், வளர்ப்பு பிராணியின் உணவு கிண்ணத்தை விட 14 மடங்கும் அதிகமாக வாட்டர் பாட்டிலில் பாக்டீரியா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வாட்டர் பாட்டில்களை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.