தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் பொது தேர்வு முடிவுகள் வெளியாகியது.
தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்க பட்டது. மேலும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால் தங்கள் எழுதிய விடைத்தாள் நகலை பெற்று அதற்கான மதிப்பெண் சரிவர கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் மருகூட்டலில் தவறுகள் இருந்தால் அவை திருத்தப்பட்டு புதிய மதிப்பெண் வழங்கப்படும். தற்போது மறு மதிப்பீடு செய்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில் தற்போது முதன் முதலாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் மதிப்பெண் கூடவோ அல்லது குறையவோ கூடும். மேலும் மறு கூட்டல் மற்றும் மதிப்பீட்டிற்கு மே 15 முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளது