இத்தாலியில் நடந்த தேசிய தேர்தலில் வாக்களிப்பு முடிவடைந்தது. அதில் ஜார்ஜியா மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணி கட்சி பெ௫ம்பான்மை வாக்குகள் பெறும் என க௫த்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
அதே சமயத்தில் இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிகளின் தொகுதியான மேட்டியோ சால்வினியின் லீக் மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியா கட்சி ஆகியவை 41 முதல் 45% வரை வாக்குகள் பெற்றுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இத்தாலியின் தேர்தல் சட்டம்,
கட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையிலான இடங்களை வழங்குகிறது.