இன்றைய வர்த்தக நாளில் ஏற்ற இறக்கமாக பயணித்து வந்த பங்குச்சந்தை, இறுதியில் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 210.45 புள்ளிகள் சரிந்து 79032.73 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 33.91 புள்ளிகள் சரிந்து 23010.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம், கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு நாளும் உச்சம் பெற்று வந்த பங்குச் சந்தை போக்கு முடிவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி பவர், எஸ் வங்கி, இண்டஸ் டவர்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஏர்டெல், வோடபோன், டாடா ஸ்டீல், ஐடிசி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்றவை சரிவடைந்துள்ளன.