சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்

April 24, 2024

இங்கிலாந்துக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. முன்னதாக பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்த மசோதாவில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது அவை விலக்கிக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மக்கள் அடைக்கலம் தேடி இங்கிலாந்துக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களை பணத்துக்காக சட்டவிரோத கும்பல் ஆபத்தான […]

இங்கிலாந்துக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.

முன்னதாக பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்த மசோதாவில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது அவை விலக்கிக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மக்கள் அடைக்கலம் தேடி இங்கிலாந்துக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களை பணத்துக்காக சட்டவிரோத கும்பல் ஆபத்தான முறையில் இங்கிலாந்துக்கு கடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அங்கு நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு உரிய ஆவணங்கள் இன்றி அடைக்கலம் தேடி வருவோரை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். அவர்களுடைய விண்ணப்பங்களை சரிபார்த்து அரசு முடிவு எடுக்கும் வரை அவர்கள் ருவாண்டா தலைநகர் கீகாலியில் உள்ள தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். இந்த திட்டம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஏனெனில் அகதிகள் நல உரிமை அமைப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த திட்டம் சட்டவிரோதமானது என்று இங்கிலாந்து உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. ருவாண்டாவுக்கு அனுப்பப்படும் அகதிகள் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதை தடுக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை அந்நாட்டு அரசுடன் இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய மசோதாவை ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற கீழவையில் திங்கள்கிழமை இரவு கொண்டு வந்து நிறைவேற்றப் போவதாக சுனக் அறிவித்திருந்தார். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் இங்கிலாந்துக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை உடனடியாக கைது செய்ய முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை ஐரோப்பிய யூனியன் கண்டித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பெரும்பான்மை இங்கிலாந்து மக்களிடையே வரவேற்பு இல்லை என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu