ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் மீண்டும் கொரோனாவால் உயிரிழப்பது 90% குறைவு - ஆய்வுத் தகவல்

February 17, 2023

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் வரை செல்வது குறைந்து வருவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதிப்பு ஏற்பட்ட பின்னர், 10 மாத காலத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும், மரணிக்கவும் நேர்வதில்லை என்று தெரியவந்துள்ளது. லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா வைரஸின் ஆல்ஃபா, டெல்டா வகையால் பாதிப்படைந்தவர்களில் 90% பேர், அடுத்த 10 மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு சக்தி உடையவர்களாக இருக்கின்றனர். மேலும், […]

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் வரை செல்வது குறைந்து வருவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதிப்பு ஏற்பட்ட பின்னர், 10 மாத காலத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும், மரணிக்கவும் நேர்வதில்லை என்று தெரியவந்துள்ளது. லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸின் ஆல்ஃபா, டெல்டா வகையால் பாதிப்படைந்தவர்களில் 90% பேர், அடுத்த 10 மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு சக்தி உடையவர்களாக இருக்கின்றனர். மேலும், ஒமிக்ரான் பிஏ 1 வகையால் பாதிக்கப்பட்ட 88% மக்கள் அடுத்த 10 மாதங்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவர்களாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு விட்டால், அதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கோ, மரணம் நேரும் அளவிற்கோ, பெரிய கொரோனா பாதிப்பு 79% நிகழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கு 36% ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடுப்பூசி மூலம் எதிர்ப்பு திறன் பெற்றவர்களைக் காட்டிலும், இயற்கையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu