ஆர்.எல்.வி. விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இந்திய விண்வெளி ஆய்வு மையம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.
மீண்டும் பயன்படுத்த கூடிய ஆர்.எல்.வி. விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ள உள்ளது. இந்த சோதனை கர்நாடகா மாநிலம் சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள விமானதளத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சோதனையில், ஆர்.எல்.வி. விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டு ஓடுதளத்தில் இருந்து 4 அல்லது 5 கி.மீ. தூரத்தில் இருந்து விடுவிக்கப்படும். அதன்பின் ஆர்.எல்.வி. விண்கலம் விமானம் போல பறந்து விமான ஓடுதளத்தில் சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.