பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் - போலீசார் 3 பேர் பலி

December 18, 2024

பயங்கரவாத குழு மருத்துவ ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருடன் சென்ற வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தியது. இதில் 3 போலீசார் பலியாகினர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரும், ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு குறிவைக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள […]

பயங்கரவாத குழு மருத்துவ ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருடன் சென்ற வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தியது. இதில் 3 போலீசார் பலியாகினர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரும், ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு குறிவைக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாம் முடிந்தபின், பயங்கரவாத குழு மருத்துவ ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருடன் சென்ற வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தியது. இதில் 3 போலீசார் பலியாகினர். 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu