பிப்ரவரி 8 ஆம் தேதி, ராக்கெட் லேப் நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கினேஸ் நிறுவனத்திற்காக ஐந்து "இணையம் மூலம் இணைக்கப்பட்ட" (IoT) செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 59 அடி உயரம் கொண்ட எலக்ட்ரான் ராக்கெட், நியூசிலாந்தில் இருந்து இந்திய நேரப்படி பிப்ரவரி 9 காலை 8:13 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. முன்னதாக, பிப்ரவரி 3 ஆம் தேதி ஏவ திட்டமிடப்பட்டிருந்த ராக்கெட், பிற விண்கலன்கள் உடனான மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் ராக்கெட் லேப் நிறுவனத்தின் முதல் விண்வெளிப் பயணம் இதுவாகும். கினேஸ் நிறுவனத்தின் 25 செயற்கைக்கோள்கள் கொண்ட குழுமத்திற்காகத் திட்டமிடப்பட்ட ஐந்து பயணங்களில் இது நான்காவது ஆகும். 66.5 நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் 401 மைல் (646 கிமீ) உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன. ராக்கெட் லேப் நிறுவனம் 2024 இல் 16 வெற்றிகரமான பயணங்களை முடித்துள்ளது, இதில் 14 சுற்றுப்பாதை பயணங்களும், இரண்டு அதிவேக சோதனை பயணங்களும் அடங்கும்.