ராக்கெட் லேப் என்ற விண்வெளி நிறுவனம், ஜப்பானைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு நிறுவனமான சின்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் 5-வது செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்ட்ரிக்ஸ்-1 எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், நியூசிலாந்தில் உள்ள ராக்கெட் லேப் ஏவுதளத்திலிருந்து எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது, இந்த நிறுவனத்தின் 35-வது வெற்றிகரமான ஏவுதல் ஆகும். இந்த ஏவுதலுடன் சின்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் மொத்த செயற்கைகோள் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், மொத்தம் 30 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி பூமியின் மேற்பரப்பின் தினசரி படங்களைப் பெறுவதற்கான திட்டத்தை கொண்டுள்ளது. தற்போது நிறுவப்பட்டுள்ள ஸ்ட்ரிக்ஸ்-1 செயற்கைகோள், நில மேலாண்மை, பேரிடர் மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.