அமெரிக்கா சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் மற்றும் சிலியின் நிகோலஸ் ஜேரியுடன் மோதியது. முதல் சுற்றில் நடந்த இந்த ஆட்டத்தில், போபண்ணா-எப்டன் ஜோடி 4-6, 7-6 (7-5), 10-8 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் மூலம், அவர்கள் தொடரில் இருந்து வெளியேறினர்.