ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரோஹித் ஜவா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூலை 27ஆம் தேதி முதல், தலைமை செயல் அதிகாரியாக அவரது பதவிக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்படத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் மேத்தாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரோகித் ஜவா பணியாற்றி வருகிறார். குறிப்பாக, நிறுவனத்தின் லண்டன் பிரிவில் இவர் முக்கிய பங்காற்றினார். தற்போது இவர் தெற்காசியா பகுதியின் தலைவராகவும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.