நாசா, தனது அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியான ரோமன் விண்வெளி தொலைநோக்கியின் வெளிப்புற பீப்பாய் அசெம்பிளிக்கான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை விட 100 மடங்கு பெரிய பார்வைக் களத்தைக் கொண்ட இந்த தொலைநோக்கிக்கு, நாசாவின் முதல் தலைமை வானியலாளர் நான்சி கிரேஸ் ரோமனின் பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தொலைநோக்கியின் வெளிப்புற பீப்பாய் அசெம்பிளி, ஏவுகணையின் சக்திவாய்ந்த விசைகளை தாங்கும் திறன் கொண்டதா என்பது சோதிக்கப்பட்டது. கார்பன் ஃபைபர் மற்றும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன இந்த பீப்பாய், தொலைநோக்கியை பாதுகாத்து, வெப்பநிலை நிலைத்தன்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதையடுத்து, தொலைநோக்கியின் மற்ற பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, வெப்பம் மற்றும் அதிர்வு ஆகியவற்றைத் தாங்கும் திறன் கொண்டதா என சோதிக்கப்படும். தற்போதைய திட்டத்தின்படி, இந்த தொலைநோக்கி 2027 மே மாதம் விண்ணில் ஏவப்படும்.