வாரணாசியில் ரூ.645 கோடி செலவில் ரோப் கார் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
வாரணாசியில் இன்று மத்திய சுகாதாரதுறை சார்பில் உலக காச நோய் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். தேசிய காச நோய் ஒழிப்பு நடவடிக்கை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதில் 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் வாரணாசியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாரணாசி காண்ட் நிலையத்தில் இருந்து கோடோவ்லியா வரையிலான 3.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் காரில் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம்.
இதற்காக வாரணாசி கோடோவ்லியா இடையே 5 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ரூ.645 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வாரணாசியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 59 புதிய குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.