சென்னையில் கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் ரோப் கார் வசதி செய்யப்பட உள்ளது.
நகர்ப்புறங்களில் ரோப் கார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என 2022-2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன்படியே திட்டங்கள் தொடங்குவதற்கான முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப்கார் திட்டத்திற்கு வடிவமைப்பு கொடுக்கப்படுகிறது. சென்னையில் கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் இந்த திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை 4.6 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள நம்ம சென்னை செல்பி பாயிண்ட் வரையிலும் என இரண்டு வழி தடத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தேசிய ரோப்வே வளர்ச்சி திட்டம் பருவதமாலா பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன கூட்டு முயற்சியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.