இங்கிலாந்து - மன்னர் 3ம் சார்லஸ்-ன் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியீடு

September 30, 2022

இங்கிலாந்து நாட்டின் ராயல் மின்ட் நிறுவனம், கடந்த 1100 வருடங்களாக வேல்ஸ் அரச பரம்பரையின் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது, இரண்டாம் எலிசபெத் ராணி மரணத்திற்கு பின்னர், புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ்-ன் உருவம் பொறித்த புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த நாணயங்கள், வரும் டிசம்பர் மாதத்திற்குள் புழக்கத்திற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, 50 பென்ஸ் நாணயம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. நாணயத்தில் இடம்பெற்றுள்ள மன்னரின் உருவ அமைப்பை மார்ட்டின் ஜென்னிங்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். […]

இங்கிலாந்து நாட்டின் ராயல் மின்ட் நிறுவனம், கடந்த 1100 வருடங்களாக வேல்ஸ் அரச பரம்பரையின் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது, இரண்டாம் எலிசபெத் ராணி மரணத்திற்கு பின்னர், புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ்-ன் உருவம் பொறித்த புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த நாணயங்கள், வரும் டிசம்பர் மாதத்திற்குள் புழக்கத்திற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, 50 பென்ஸ் நாணயம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

நாணயத்தில் இடம்பெற்றுள்ள மன்னரின் உருவ அமைப்பை மார்ட்டின் ஜென்னிங்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். அந்த உருவத்திற்கு மன்னர் சார்லஸ் ஒப்புதல் வழங்கியுள்ளார். இங்கிலாந்து நாணயங்களின் வழக்கப்படி, முந்தைய ஆட்சியாளரின் உருவ அமைப்புக்கு எதிர் திசையில் நடப்பு ஆட்சியாளரின் உருவமைப்பு இடம்பெற வேண்டும். எனவே, மூன்றாம் சார்லஸ்-ன் இடது புற பக்கவாட்டு முக அமைப்பு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, முந்தைய ஆட்சியாளரான இரண்டாம் எலிசபெத் ராணியின் வலது புற முகத் தோற்றம் நாணயத்தில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாணயத்தில் இடம் பெற்றுள்ள மன்னரின் உருவ அமைப்பில் கிரீடம் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன், "King Charles III, By the Grace of God, Defender of the Faith" என்று பொருள்படும் படியான லத்தின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நாணயத்துடன் சேர்த்து, ராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவு நாணயமாக, 5 பவுண்டு நாணயம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு புறத்தில் மன்னர் சார்லஸ்-ன் உருவமும், மறுபுறத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் இரண்டு உருவ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பேசிய ராயல் மின்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அனி ஜோசப், "தற்போதுள்ள சமூக ஊடகங்கள் மற்றும் இதர தொழில்நுட்ப வசதிகள் முற்காலத்தில் இருந்திருக்கவில்லை. எனவே, முன்னர் இருந்த காலத்தில், நாணயம் மூலமாக மட்டுமே ஆட்சியாளரின் முகம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அந்த பாரம்பரியத்தை தற்போது வரை கடைபிடித்து வருகிறோம்" என்று கூறினார். மேலும், மார்ட்டின் ஜென்னிங்ஸ், நாணயத்தின் வடிவமைப்பில் பங்களித்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu