மத்தியப்பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை திட்டம் தொடக்கம்

மத்தியப்பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப்பிரதேச அரசு சமீபத்தில் தாக்கல் செய்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் ரூ.1.02 லட்சம் கோடி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் வகையில் முதல்வரின் அன்பு சகோதரி திட்டத்துக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது பிறந்தநாள் […]

மத்தியப்பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப்பிரதேச அரசு சமீபத்தில் தாக்கல் செய்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் ரூ.1.02 லட்சம் கோடி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் வகையில் முதல்வரின் அன்பு சகோதரி திட்டத்துக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது பிறந்தநாள் தினமான நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் வராத பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்படும். இவற்றைப் பெற தகுதியான பெண்கள் மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பத்தை அளிக்கலாம். இவற்றை பரிசீலனை செய்தபின் பயனாளிகளின் பட்டியல் மே 1-ம் தேதி வெளியிடப்படும். இறுதிப் பட்டியல் மே 31-ம் தேதி வெளியிடப்படும். பயனாளிகளுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000/- நிதியுதவி கிடைக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu