சாலைகளில் மோட்டார் வாகன விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு ஊக்க தொகையுடன் கூடிய ரூபாய் பத்தாயிரம் வெகுமதியாக வழங்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
.சாலை விபத்தில் சிக்கியவர்களை "கோல்டன் ஹவர்" என்று அழைக்கப்படும் கால அளவிற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றி இருக்க வேண்டும். இவ்வாறு செய்பவர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூபாய் 5000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனை பெற தகுதியானவர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
இதில் ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றி இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும். ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றி இருந்தால் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதேபோல் ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றி இருந்தால் அவர்கள் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் அத்துடன் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.