தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்காக மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 13 மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2025-26-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை, தி.நகரில் 1.09 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டர்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ப்ரீபெய்டு திட்டமாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலவச மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.