சீன உடனடி கடன் செயலிகள் வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ரேசர் பே (Razorpay ), கேஷ் பிரீ (Cashfree) , பே டி எம் (Paytm) போன்ற ஆன்லைன் பேமென்ட் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்தியது. அப்போது சோதனையிட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இ௫ந்து 17 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட 18 வழக்குகளின் அடிப்படையில் 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
அதாவது மொபைல் செயலிகள் மூலம் சிறிய அளவில் கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையின் போது, இந்த நிறுவனங்கள் சீன நபர்களால் இயக்கப்படுவது தெரியவந்தது. மேலும் இவை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வருமானத்தை உருவாக்குகிறது" என்று அமலாக்க துறை கூறியது.
இது பற்றி கேஷ் பிரீ நிறுவனம் ஒரு அறிக்கையில், அமலாக்க துறையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்து தேவையான தகவல்களை வழங்குவதாகவும், அதன் போர்டிங் செயல்முறைகள் கறுப்பு பணச்சலவை தடுப்பு சட்டத்தைப் பின்பற்றுவதாகவும் ௯றியது. அதைத் தொடர்ந்து மற்ற இரு நிறுவனங்களும் அமலாக்க துறைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்தன.