தன்பாத் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட14 பேர் பலியாகினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டின் தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்பாத் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.