தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய ரூ.26 கோடி ஐஸ் போதை பொருள் சிக்கியது

January 10, 2023

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய ரூ.26 கோடி ஐஸ் போதை பொருள் சிக்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கை கடற்கரை பகுதிகளில் போதை பொருள் தடுப்பு போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது புத்தளம் கடற்கரையில் சோதனை செய்த போது ஐஸ் போதை பொருள் என்பது தெரிய வந்தது. போதைப் பொருள் கடத்தி வந்த […]

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய ரூ.26 கோடி ஐஸ் போதை பொருள் சிக்கியுள்ளது.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கை கடற்கரை பகுதிகளில் போதை பொருள் தடுப்பு போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது புத்தளம் கடற்கரையில் சோதனை செய்த போது ஐஸ் போதை பொருள் என்பது தெரிய வந்தது. போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.26 கோடி மதிப்புள்ள 2 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப் பொருள், தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகில் கொண்டு செல்லப்பட்டு, நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த படகுக்கு போதைப் பொருள் மாற்றம் செய்யப்பட்டது. அங்கிருந்து இலங்கையின் கல்பட்டி பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் படகில் இருந்து ஐஸ் போதை பொருளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu