நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் குடிநீர் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

August 21, 2023

நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீருக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் கிழக்கு கடற்சாலையில் நெம்மேலி என இரண்டு இடங்களில் தினமும் தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தன. இந்நிலையில், ரூ.4,276 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டர் (40 […]

நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீருக்கும் திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் கிழக்கு கடற்சாலையில் நெம்மேலி என இரண்டு இடங்களில் தினமும் தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தன.

இந்நிலையில், ரூ.4,276 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டர் (40 கோடி லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை அமைப்பதற்கான இடம் நெம்மேலி அருகே பேரூரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமான இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்களுக்கும் சென்னையின் தென் மேற்கு பகுதியில் உள்ள 35 பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வழங்க முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu