தெலுங்கானாவில் ரூபாய் 500க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் மகாலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டது.
தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக 200 யூனிட் வரை இலவசம் மின்சாரம் மற்றும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் திட்டத்தை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். அதன்படி அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ரூபாய் 500க்கும் சமையல் சிலிண்டர் வழங்கப்படும் மகாலட்சுமி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதன் மூலம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி, ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் ஆகியவை கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது.