சென்னை மாநகரை அழகுபடுத்தும் பணிக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், நகரத்தின் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, சாலை மைய தடுப்புகள் மற்றும் தீவுத்திட்டங்களை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும், மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.42 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.