ரூ. 6,500 கோடி செலவில் தயாராகும் தேஜஸை விட சக்தி வாய்ந்த போர் விமானம்

September 2, 2022

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு கேபினட் கமிட்டி (சிசிஎஸ்) தேஜஸ் போர் விமானத்தின் (எல்சிஏ) வெற்றிக்குப் பிறகு, போர் விமானத்தின் அடுத்த சக்திவாய்ந்த பதிப்பை உருவாக்க தேஜஸ் மார்க்-2 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. தேஜஸ் மார்க்-2 திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.2,500 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இ௫ப்பினும் விமான சோதனை மற்றும் சான்றிதழ் போன்றவற்றிற்கு ரூ.6,500 கோடி கூடுதலாக செலவாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேஜஸ் மார்க்-2 ஆனது நீண்ட போர் வீச்சு […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு கேபினட் கமிட்டி (சிசிஎஸ்) தேஜஸ் போர் விமானத்தின் (எல்சிஏ) வெற்றிக்குப் பிறகு, போர் விமானத்தின் அடுத்த சக்திவாய்ந்த பதிப்பை உருவாக்க தேஜஸ் மார்க்-2 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது.

தேஜஸ் மார்க்-2 திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.2,500 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இ௫ப்பினும் விமான சோதனை மற்றும் சான்றிதழ் போன்றவற்றிற்கு ரூ.6,500 கோடி கூடுதலாக செலவாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேஜஸ் மார்க்-2 ஆனது நீண்ட போர் வீச்சு மற்றும் அதிக ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று ௯றப்பட்டுள்ளது.
மேலும் தேஜஸ் மார்க்-2 வைத் தொடர்ந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான மற்றொரு பிரமாண்ட திட்டம் செயல்படுத்தப்படலாம் என்றும் அவ்வறிக்கை கூறியது. ரூபாய் 15,000 கோடியில் உ௫வாகும் இத்திட்டத்திற்கான கேபினட் கமிட்டி அனுமதி அடுத்த சில மாதங்களுக்குள் வெளிவ௫ம் என ௯றப்பட்டுள்ளது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu