அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்க இயக்குனரகம் ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது.
செப்டம்பர் 11, 2020 அன்று பறிமுதல் உத்தரவுடன் தொடங்கிய விசாரணை, தமிழ்நாட்டு தொழிலதிபர் ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய இந்திய நிறுவனம் மீது கவனம் செலுத்தியது. ஆகஸ்ட் 26, 2024 அன்று, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் தீர்ப்பு ஆணை வெளியானது. அதன்படி, ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.