ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்க ரூ.946.92 கோடியில் ஒப்பந்தம்

November 18, 2022

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் ரூ.946.92 கோடி மதிப்பில் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இது குறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIன் கீழ், ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946.92 கோடி மதிப்பில் நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் […]

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் ரூ.946.92 கோடி மதிப்பில் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIன் கீழ், ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946.92 கோடி மதிப்பில் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2024ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2024ம் ஆண்டு நவம்பர் முதல் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu